நிரந்தரம்!

வெற்றிகளுக்காக மட்டுமே
காத்திருக்கும்
இரத்தினக்கம்பள வரவேற்புகள்
இருக்கும் வரை

தன் தவறுகளுக்குத்
தானே பொறுப்பேற்கும் தைரியம்
அனைவரிடத்தும்
வாய்க்கும் வரை

உழைத்த கூலியையும்
ஒருவேளை சோற்றையும்
உரிமையுடன் கேட்டுப் பெறமுடியா
அவலம் நீடிக்கும் வரை

தரத்தைப் புறந்தள்ளி
இலவசங்களில் ஈர்க்கப்படும்
இன்றைய நிலை
மாறும் வரை

சந்தேகத்தைத் துணை கொண்டு
உண்மை அன்பிற்கு
வைக்கப்படும் சோதனைகள்
தொடரும் வரை

பொய்மை நிரந்தரம்!

2 கருத்துகள்:

"உழவன்" "Uzhavan" சொன்னது…

உண்மைதான். பொய்மை அழிந்து வாய்மை செழிக்க வேண்டுவாம்.

உழவன்

பெயரில்லா சொன்னது…

Ennai migavum kavarnthathu... :-)

Adhuvum kadaise varigal romba nalla iruku...