கவிதையெழுதலாம் வாங்க!

வித்தியாசமான பாடுபொருட்களை
ஆகச்சிறந்த வார்த்தைகளில்
அடக்கியாளும் கலை
என் கவிதைகளில்
கைவரப்பெறுவதில்லை

மூன்றாவது வரியிலோ
அதற்கும் முன்னரோ கூட
'புரிந்து'விடுபவை தான்
என் பின்நவீனத்துவ
கவிதை முயற்சிகள்

குட்டைப் போர்வையினால்
உடல்மூட முனைவதுபோல்
அடங்கா வார்த்தைகள் சில
அங்கங்கே
துருத்திக்கொண்டுதானிருக்கும்

'நாற்பது வரிகளுக்கு மிகாமல்'-
குறிப்புகளைப் புறந்தள்ளியே
விடையெழுதிப் பழகிவிட்ட எனக்கு
நான்குவரிக் கவிதையெல்லாம்
ரசித்துப் படிக்க மட்டுமே

வார்த்தை அடுக்குகளையே
'கவிதை' என வகைப்படுத்தத் துணிந்துவிடும்
என் இவ்வரிகளை வாசிக்கும்போதே
"நாமும் கூட கவிதை எழுதிவிடலாம்" என்று
கற்பனை விதை
உங்களுக்குள் முளைவிடுமாயின்
வேறொரு பயனும்
வேண்டி நிற்கா என் கவிதைகள்!

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஒரே சிரிப்பா வருது அண்ணா! சூப்பரா இருக்கு! :-)

பெயரில்லா சொன்னது…

Nalla Irukku.. :-) :-)

கனகராசு சீனிவாசன் சொன்னது…

@பெயரில்லா - நன்றி

பெயரில்லா சொன்னது…

கவிதை எழுதும் கலையையே ஒரு கவிதையாய் வடித்திருப்பதும்....

உங்களுக்கும் கவிதை எழுத தோனுமாயின் என்று முடித்திருப்பதும்...

சொல்லாடல்கள் மிக அழகு!

வாழ்த்துக்கள் நண்பரே!

கனகராசு சீனிவாசன் சொன்னது…

@ஷீ-நிசி - நன்றி நண்பரே!