உன்னாலணையும் உயிர்!



அப்படி,
எங்குதான் போய்விட்டாய்?

எப்படியோ
கடந்துவிடுகின்றன
கடத்தியும் விடுகிறேன்
நீயற்ற பகல்களை!

குளிர்பனி நெருக்கத்தில்
உடல் குறுக்கிக் கிடக்கையில்
பீறிட்டெழும் நினைவுகளை
போர்வைக்குள் சேமிக்கிறேன்
அடக்கமாட்டாமல்!

இன்றே கடைசி என்ற
நினைப்பினால் மட்டுமே
விழித்தெழுகிறேன்
ஒவ்வொரு காலையிலும்!

அலையிடை ஓடமும்
மலையிடை பருந்தும்
அடிக்கடி வந்துபோகின்றன!

நிதர்சன விதிகளை
நெடுநேரம்
பொய்க்கச் செய்யாமலிருக்க
விரைந்து வா
வந்துன்னை முழுமை செய்!


இதன் தொடர்ச்சியினை இங்கு வாசிக்க.

கருத்துகள் இல்லை: