புத்தக சந்தையும் நானும்

இது ஐந்தாவது வருடம், தொடர்ச்சியாக நான் சென்னை புத்தக சந்தைக்குச் செல்வது. நிறைய மாற்றங்கள், நிறைய அரங்குகள், நிறைய புத்தகங்கள். அதைப்பற்றி எல்லாம் எழுதி, மறுபடியும் இதை மற்றுமொரு என் சுயபுராணப் பதிவாக மாற்றாமல், நான் வாங்கிய புத்தகங்களை மட்டும் பட்டியலிடுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய ஆவணத்திற்காக மட்டுமே. அதையும் மீறி இந்த பட்டியலில் உங்களுக்கு ஏதேனும் பிடித்திருந்தால், நம் ரசனைகள் ஒத்து போவதற்காக நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

(நூலின் பெயர் - ஆசிரியர் - பதிப்பகம் என்ற வரிசையில் வாசிக்க)

புதினங்கள்:
1. யாமம் - எஸ். ராமகிருஷ்ணன் - உயிர்மை
2. காகித மலர்கள் - ஆதவன் - உயிர்மை
3. கொலையுதிர் காலம் - சுஜாதா - உயிர்மை
4. தந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி - கிழக்கு
5. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - கிழக்கு
6. கடல்புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு
7. மிஸ்டர் வேதாந்தம் - தேவன் - கிழக்கு
8. இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன் - விசா
9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் - மீனாட்சி
10. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை(மலையாளம்) , தமிழ் மொழிபெயர்ப்பு சுந்தர ராமசாமி - காலச்சுவடு

சிறுகதைகள்:
11. சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு - சுந்தர ராமசாமி - காலச்சுவடு
12. கிராமிய கதைகள் - கி. ராஜநாராயணன் - அன்னம்

கவிதைகள்:
13. கல்யாண்ஜி கவிதைகள் - கல்யாண்ஜி - வ.உ.சி நூலகம்
14. நீராலானது - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
15. வனப்பேச்சி - தமிழச்சி தங்கப்பாண்டியன் - உயிர்மை
16. தண்ணீர்தேசம் - வைரமுத்து - சூர்யா

கட்டுரைகள்:
17. கணையாழி கடைசிப் பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை
(கணையாழி இதழில் 1965-1998 ஆண்டுகளில் சுஜாதா எழுதிய பத்திகளின் தொகுப்பு)
18. கரிசல்காட்டுக் கடுதாசி - கி. ராஜநாராயணன் - அன்னம்
(இது கதைகளா இல்லை கட்டுரைகளா இல்லை இரண்டுமா என்பதில் சிறு சந்தேகம் உள்ளது. படித்துவிட்டு சரி செய்ய வேண்டும்)

பிற:
19. சிரிப்பு டாக்டர் - முத்துராமன் - கிழக்கு
(என். எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு)
20. கோக் ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு - என். சொக்கன் - கிழக்கு
(கொக்கோ கோலா வளர்ந்த கதை)


இவை தவிர என் தங்கை அவள் பங்கிற்கு அவளுக்கு விருப்பான இன்னும் பல புத்தகங்கள் நேற்று வாங்கி இருக்கிறாள். அந்த பட்டியலையும் சேர்க்கவேண்டும்..;)

1 கருத்து:

Unknown சொன்னது…

அண்ணா! இந்த இடுகை மூலம், புத்தக கண்காட்சியில் எனது நான்காவது ஆண்டை தவற விட்டுவிடாமல் செய்ததற்கு நன்றி!:-)