உன்னாலணையும் உயிர்!

முதலில் இதை வாசிக்க.

அப்படி
எங்குதான் போய்விட்டாய்?

உன்னால் மட்டுமே இயன்றிருக்கிறது!
வரையறுத்துவிடயியலா
குணங்களும்
புறப்பார்வைகளுக்கு நேரெதிரான
அகக்கூறுகளுமுடைய என்னை
'நானாகவே' ஏற்றுக்கொள்ள!

பொய்யெனப் புரிந்தும்
என் பொய்களை
உண்மைபோலாக்கிக்கொள்ள
மெய்யே எனினும்
என் மெய்வருத்த
இடமளிக்காமல் பார்த்துக்கொள்ள
உனையன்றி யாருமில்லை இங்கெனக்கு!

அழப்பயந்ததில்லை நான்!
ஆனாலும் அழவில்லை.
வரவிருக்கும் அந்தநாளில்,
நம் இணைவையேற்று வரவேற்க
வேறொன்றுமில்லை என்னிடம்
அழுகையையன்றி!

வாழ்வதனை வாழவேண்டும்
புரிந்துணர்ந்து!
என்றென்றும் நீ வேண்டும்
அதை உணர்ந்து
விரைந்து வா
வந்துன்னை முழுமை செய்!

கருத்துகள் இல்லை: